Sunday, March 3, 2013

3 வயது சிறுமியின் உயிரைக் காப்பாற்றிய வளர்ப்பு நாய் :

பயிர்ஸ்வின் கிராமத்தைச் சேர்ந்த 3 வயது சிறுமி, ஜுலியா கடந்த வெள்ளிக்கிழமை மாலை வீட்டின் பின்வாசல் அருகே விளையாடிக் கொண்டிருந்தவர் கால்போன போக்கில் நடந்து புதர்கள் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் சென்றுவிட்டார்.
மைனஸ்-5 டிகிரி என்ற உறைநிலை குளிரில் காணாமல் போன மகளை தாயாருடன் சேர்ந்து சுமார் 200 பேர் தேடியும் இருள் சூழ்ந்ததால் இருக்கும் இடத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
உள்ளூர் பொலிசார் மற்றும் மீட்புப் படையினர் அப்பகுதியில் உள்ள அனைத்து இடங்களிலும் தேடிய போதும் மறுநாள் காலை ஒதுக்குப்புறமான சதுப்பு நிலப் பகுதியில் ஒரு சிறுமியின் முனகல் ஒலி கேட்டது.
ஒலி வந்த திசைக்கு விரைந்துச் சென்ற மீட்புப் படையினர் ஆச்சரியத்தில் உறைந்துப் போய் நின்றனர். குளிரில் உடல் விறைத்த நிலையில் இருந்த ஜுலியாவிற்கு கதகதப்பூட்டும் வகையில் தனது உடலால் அவளை அணைத்தபடி அவர்களது வளர்ப்பு நாய் படுத்திருந்தமையால் தான் அச் சிறுமியின் உயிர் காக்கப்பட்டது என்பதை உணர்ந்த மீட்புப்படையினர் பிரமித்து போயினர்.
உடனடியாக ஜுலியாவை மருத்துவமனையில் அனுமதித்த அவர்கள், இச்சம்பவத்தை ஊடகவியவலாளர்களுக்கு தெரிவித்ததையடுத்து, ஜுலியா மற்றும் அவர்களது வளர்ப்பு நாயின் மீது ஊடகதுறையினரின் பார்வைகள் விழுந்த வண்ணம் உள்ளது.

No comments:

Post a Comment